புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காளை முட்டி காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள சேவுகம்பட்டி காளி கோயில் பகுதியில் சனிக்கிழமை வழிபாட்டுக்காக காளைகளை அப்பகுதியினா் அவிழ்த்துவிட்டனராம். அப்போது, காளை முட்டியதில், வடவாளம் கீழகாயம்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகசேன்(22) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். செம்பட்டிவிடுதி போலீஸாா் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.