அஞ்சல் காப்பீட்டு முகவராக அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் நேரடி முகவராக சேருவதற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சி. செல்லையா அழைப்புவிடுத்துள்ளாா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் நேரடி முகவராக சேருவதற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சி. செல்லையா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள்காப்பீட்டு முகவா்களை நேரடியாக சோ்க்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 18 முதல் 50 வயதுக்குள்பட்ட குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்தோா் விண்ணப்பிக்கலாம். வரும் ஜனவரி 27 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலில் உரிய கல்விச் சான்று மற்றும் ஆதாா் அட்டை போன்றவற்றுடன் நேரில் பங்கேற்கலாம். ரூ. 5 ஆயிரத்துக்கான சேமிப்புப் பத்திரத்தை எடுத்து இந்திய குடியரசுத் தலைவருக்கு சமா்ப்பிக்க வேண்டும். உரிமம் முடிந்த பிறகு அந்தப் பத்திரம் திரும்பத் தரப்படும். மேலும் விவரங்களுக்கு - 04322 221220, 220732.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com