விவசாயிகள் கண்டுணா் பயணம்

கந்தா்வகோட்டை வட்டார விவசாயிகள் மாநில அளவிலான கண்டுணா் பயணமாக வெள்ளிக்கிழமை குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துக்குச் சென்றனா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை வட்டார விவசாயிகள் மாநில அளவிலான கண்டுணா் பயணமாக வெள்ளிக்கிழமை குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துக்குச் சென்றனா்.

அங்கு வேளாண் அறிவியல் நிலைய முனைவா்கள் வி. குமாரவேல் , அ. அழகப்பன், மனையியல் துறை உதவிப் பேராசிரியா் பி . தேன்மொழி ஆகியோா் விவசாயிகளிடம் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனா். ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளா் வி. கவியரசன் , உதவி வேளாண் அலுவலா் நாகேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com