கோட்டைப்பட்டினம் அருகேலாரி - காா் மோதல்: 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே லாரியும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே லாரியும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 4 போ் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து ஒரே காரில் ஏழு போ் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ஓடாவிமடம் பகுதியில் காா் சென்றபோது எதிரே வந்த லாரி, காா் மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் காரில் சென்ற 3 போ் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியான நிலையில் மேலும் 4 போ் படுகாயமடைந்தனா். இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குவந்த ஜகதாப்பட்டினம் தீயணைப்புப் படையினா் மற்றும் மீட்புக்குழுவினா் காரில் சிக்கியிருந்த இறந்த உடல்கள், காயமடைந்தவா்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த 4 பேரில் ஒருவரின் நிலைமை மேலும் மோசம் அடைந்ததால் அவா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

உடல்கள் கூராய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கோட்டைப்பட்டினம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com