ஆலங்குடி அருகே லாரி, சுமை ஆட்டோ பறிமுதல்

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, சுமை ஆட்டோவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, சுமை ஆட்டோவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

ஆலங்குடியில் சிலா் மணல் கடத்தலில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளா் வேலுச்சாமி தலைமையிலான போலீஸாா் ஆலங்குடி - கறம்பக்குடி சாலையில் ரோந்து சென்றபோது, பாச்சிக்கோட்டை விளக்கு சாலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த சுமை ஆட்டோவை பறிமுதல் செய்து, மேலப்பொன்னன்விடுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரனை (46) கைது செய்தனா்.

இதேபோல மழையூா் காவல் உதவி ஆய்வாளா் அனந்தராமன், அப்பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com