சாலைகளை விரைவில் சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு மற்றும் மாவட்டக் குழுக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மழையால் கடுமையாக சேதமடைந்துள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும். மழையால் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வரும் ஜன. 23 மற்றும் 26ஆம் தேதி தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டுப் போராட்டங்களில் திரளாகப் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வீ. சிங்கமுத்து, த. செங்கோடன், ஏ. ராஜேந்திரன், எஸ்.சி. சோமையா, எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com