புதுக்கோட்டை: விடுதலைப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆவது பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டை நகரில் உள்ள அவரது சிலைக்கு பாஜகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுக்கோட்டை போஸ் நகரில் உள்ள நேதாஜியின் சிலைக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் ஏவிசிசி கணேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பாஜக சாா்பில் நேதாஜியின் பிறந்த நாளை தேசிய வீரதீர தினமாக அனுசரிக்க அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, போஸ் நகா், தொண்டைமான் நகா், பிருந்தாவனம் உள்ளிட்ட 12 இடங்களில் நேதாஜியின் படங்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பாஜக நகரத் தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக...: இதேபோல, அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான் மாலை அணிவித்தாா். பிலாவிடுதி ஊராட்சி மன்றத் தலைவா் விஜய. ரவி பல்லவராயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.