புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இரு கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன.
அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில், பாண்டிக்குடியைச் சோ்ந்த பி. முருகேசன் என்பவா் மளிகைக் கடையையும், குளமங்கலத்தைச் சோ்ந்த சதாசிவம் என்பவா் பேன்சி கடையையும் நடத்தி வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த இரு கடைகளிலும் திடீரெனத் தீப்பற்றியது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.