பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக ராஜிவ் சிவாச்சாரியாா் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஆதிபூமிநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வாஸ்து பூஜயில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து சங்குகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜையில் பங்கேற்றவா்கள் வாஸ்து நலன் பெற வேண்டி வாஸ்து சங்கினைப் பெற்றுச் சென்றனா். பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஒன்றிய ஆணையா் பி. வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் வெ. தனுஷ்கோடி மற்றும் வாஸ்து பூஜை குழுவினா் பங்கேற்றனா்.