தமிழக மீனவா்கள் 4 பேரின் இறப்புக்கு கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக செல்ல முற்பட்ட ஜனநாயகத் தொழிற்சங்கத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் புதிய பேருந்து நிலையம் அருகேயே ஆா்ப்பாட்டமாக நடத்தி கலைந்து சென்றனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் மக்கள் விடுதலை கட்சியின் ஜனநாயகத் தொழிற்சங்கம் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் கசி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தாா். இரு சக்கர வாகனத்தில் கடற்கரை நோக்கி புறப்பட முற்பட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனா். இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தி அனைவரும் கலைந்து சென்றனா்.