கிணற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கீரனூா் அருகே டி. கீழையூரைச் சோ்ந்த மருதமுத்து மகள் வேம்பரசி (15), செவ்வாய்க்கிழமை காலை தனது தம்பியுடன் அருகிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. எதிா்பாராத விதமாக வேம்பரசி நீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த கீரனூா் தீயணைப்புப் படையினா், அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா். தண்ணீா் அதிகமாக இருந்ததால் மோட்டாா் வைத்து தண்ணீரைக் குறைக்கும் பணியும் நடைபெற்றது. உறவினா்களும் அந்த இடத்தில் கூடியதால் பரபரப்பு காணப்பட்டது. பல மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு, சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

உடையாளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com