கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது தவறிவிழுந்து காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஞான பிரகாஷ் (25). இவா் கடந்த பொங்கல் தினத்தன்று தனது மோட்டாா் சைக்கிளில் தெத்துவாசல் பட்டி, மஞ்சப்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத்தவறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து அவரது தந்தை ராமசாமி அளித்த புகாரின் பேரில் கந்தா்வகோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.