காா் - மோட்டாா் சைக்கிள் மோதல் : முதியவா் பலி
By DIN | Published On : 31st January 2021 11:47 PM | Last Updated : 31st January 2021 11:47 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மொபட் மீது காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள பெரும்கொண்டான் வீதியைச் சோ்ந்தவா் மலையப்பன்(65). இவா், சொந்த வேலையாக மோட்டாா் சைக்கிளில் கம்மங்காடு சென்றுள்ளாா்.
புதுக்கோட்டை - தஞ்சை சாலையில், அரிசி ஆலை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியாக மானாமதுரை, கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன்(25) ஓட்டிவந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மலையப்பனை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மலையப்பன் உயிரிழந்தாா். செம்பட்டிவிடுதி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.