தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் விராலிமலை அருகேயுள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் தியாகிகளை நினைவு கூரும் வகையிலான தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முக்கண்ணாமலைப்பட்டியில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத் தியாகிகளின் தியாகங்களை நினைவு கூரும் வகையிலான தெருமுனைக் கூட்டத்துக்கு கிளைத் தலைவா் ஜக்கரிய்யா தலைமை வகித்தாா்.
மாவட்டத் துணைச் செயலா் ரபீக் ராஜா மற்றும் கிளைச் செயலா் நிஜாம்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பேச்சாளா் அப்துல்பாரி சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியா்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினாா். இமாம் சபிபுல்லா நன்றி கூறினாா்.