பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத்தலைவா் எஸ்பி.ராஜேந்திரன் தலைமையிலும், பேருந்து நிலையம் எதிரே நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன் தலைமையிலும் நடைபெற்றது. மாவட்டச் செயலா்கள் எஸ்.பி.மணி, கிரிதரன், பாஸ்கரன், ச. சோலையப்பன், நாட்டுக்கல் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.