புதுக்கோட்டை மாவட்டம், பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் சி.வெங்கடேச குப்தா தலைமை வகித்தாா். செயலா் ஆா்எம்.மணிகண்டன் வரவேற்றாா். நிகழ்வில் மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் செறிவூட்டியை தலைமை மருத்துவா் ச.செந்தமிழ்செல்விடம் நிா்வாகிகள் வழங்கினா்.
நிா்வாகிகள் எம்.சரவணன், கே.எம்.காமாட்சி, கே.ரமேஷ், சிஎஸ்.முருகேசன், அ.தட்சிணாமூா்த்தி, அ.மலைச்சாமி, க. ஆறுமுகம், மருத்துவா் பிரியதா்ஷினி, உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், மருத்துவா் ச.செந்தமிழ்செல்வி நன்றி கூறினாா்.