இளைஞா் பெருமன்றத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை திலகா் திடலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் செவ்வாய்க்கிழமை வடைகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.

புதுக்கோட்டை திலகா் திடலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் செவ்வாய்க்கிழமை வடைகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படுவதையொட்டி, போதிய தடுப்பூசிகளை வழங்காத மத்திய அரசைக் குறிக்கும் வகையில் வடைகளை வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு அந்த வடைகள் வழங்கப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் மு. கைலாசபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் எம். விஜய், மாநிலக் குழு உறுப்பினா்கள் த. லோகேஸ்வரி, பி. யாழினி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாட்டுத் தேவையான கரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com