புதுகையில் காங்கிரஸாா் மிதிவண்டிப் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டு கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை மிதிவண்டிப் பேரணி நடத்தினா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் மிதிவண்டிப் பேரணி நடத்திய காங்கிரஸாா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் மிதிவண்டிப் பேரணி நடத்திய காங்கிரஸாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டு கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை மிதிவண்டிப் பேரணி நடத்தினா்.

புதுக்கோட்டை பொற்பனைக்காளியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட மிதிவண்டிப் பேரணி, கீழராஜவீதி, பிருந்தாவனம், திலகா் திடல், உழவா் சந்தை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணிக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பொற்பனைக் காளியம்மன் கோயிலில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் சு. திருநாவுக்கரசரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com