புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினா்களாக சேர பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மண்டலக் கூட்டுறவுப் பதிவாளா் எம். உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினா்களாக சேர அதற்கான படிவத்தை அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ல்ஸ்ரீஸ்ரீக்ஷஹய்ந்.ண்ய் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சங்கங்கள் வழங்கும் சேவைகளைப் பெற்று விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் .