மத்திய பாஜக அரசின் ஜனநாயக மற்றும் சிறுபான்மையினா் விரோதப் போக்கைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஜனநாயக மேடையின் சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஜனநாயக மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க. சுந்தரராஜன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், முற்போக்கு சிந்தனையாளா் இரா. பாவாணன், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.ஏ. அஸ்ரப்அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அ. பாவாணன், மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.