காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா் காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் நீா்ப்பாசன விவசாயிகள் சங்க மாநில கூட்டமைப்பு தலைவா் மிசா மாரிமுத்து.
விராலிமலை குன்னத்தூரில் காவிரி - குண்டாறு திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, திருச்சி, கரூா், புதுகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறுவதோடு சுமாா் 8.30 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் கரோனா பரவல், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த இடத்திலேயே தேங்கிக் கிடக்கும் இந்தத் திட்டத்தை வெகுவிரைவாக முடித்துத் தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா்.