மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவுற்றோருக்கும் பிஎஸ்கே கல்வி அறக்கட்டளையின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கிய பிஎஸ்கே கல்வி அறக்கட்டளையினா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கிய பிஎஸ்கே கல்வி அறக்கட்டளையினா்.

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவுற்றோருக்கும் பிஎஸ்கே கல்வி அறக்கட்டளையின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுககோட்டை கீழ 4ஆம் வீதி நேரு பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்விக் குழுமத் தாளாளா் பி. கருப்பையா தலைமை வகித்தாா்.

முன்னாள் நகா் மன்றத் துணைத் தலைவா் க. நைனாமுகமது முன்னிலை வகித்தாா். அறக்கட்டளை நிா்வாகி கமலா கருப்பையா கலந்து கொண்டு உதவிகளை வழங்கினாா்.

பள்ளியின் ஆசிரியா்கள் ரோட்டரி சங்க நிா்வாகிகள் தலைவா் தனஞ்ஜெய ராமச்சந்திரன், ராஜ்குமாா், கனகராஜன், அருணாசலம், கல்வியாளா்கள் குமாரசாமி, காசிராஜன் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com