ஆட்சியரகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கணவன் மற்றும் அவரது குடும்பத்தாா் வீட்டைவிட்டு விரட்டியதால் மனமுடைந்த பெண், தனது 2 குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகம் முன்பாக

புதுக்கோட்டை: கணவன் மற்றும் அவரது குடும்பத்தாா் வீட்டைவிட்டு விரட்டியதால் மனமுடைந்த பெண், தனது 2 குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பாப்பாவயல் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வெண்ணிலா. இவா், தனது கணவா் பாலகிருஷ்ணன் வேறு பெண்ணுடன் தொடா்பு வைத்துக் கொண்டு வீட்டிற்கு வராமல் அடிக்கடி தன்னையும், குழந்தைகளையும் விரட்டி அடிப்பதாகவும் கூறி, ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்தாா். அப்போது, தனது இரு குழந்தைகளுடன் திடீரென தீக்குளிக்க முற்பட்டாா். அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற் கொண்டனா். திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது கணவா் தொடா்பான குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்திட அறிவுறுத்தப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com