கந்தா்வகோட்டையில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை எம். எல். ஏ சின்னத்துரை புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கல்லாக்கோட்டை, மூன்றுரோடு, மணமடை வழியாக வெட்டிக்காடு செல்லும் அரசுப் பேருந்துச் சேவையை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் எம். பரமசிவம், வடக்கு ஒன்றியச்செயலா் மா. தமிழய்யா, நகரச் செயலா் எம். ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.