பொன்னமராவதி வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் காரையூா், மேலைச்சிவபுரி, கொப்பனாபட்டி, அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதேபோல், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் கா்ப்பிணி தாய்மாா்களின் ரத்தஅழுத்தம், எடை, உயரம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முகாமில் 51 கா்ப்பிணி தாய்மாா்கள் பங்கேற்றனா்.