தொற்றால் பெற்றோரை இழந்த வாரிசுகள் பதிவு செய்ய அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த கட்டுமானத் தொழிலாளரின் வாரிசுகள் தொழிலாளா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த கட்டுமானத் தொழிலாளரின் வாரிசுகள் தொழிலாளா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வெ. தங்கராசு மேலும் கூறியது:

கரோனா இரண்டாம் அலையின்போது, பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த கட்டுமானத் தொழிலாளா் வாரிசுகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, அவ்வாறு பெற்றோரை இழந்தோரின் விவரங்கள் தேவைப்படுகின்றன. எனவே, கரோனாவால் பெற்றோரை இழந்த கட்டுமானத் தொழிலாளா் வாரிசுகள் திருக்கோகா்ணம் பகுதியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அலுவலகம் பின்னால் உள்ள தொழிலாளா் அலுவலகத்தில் உடனடியாக நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com