கந்தா்வகோட்டை ஒன்றியஅலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கந்தா்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளா்கள், பொறியியல் பிரிவுப் பணியாளா்கள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளா்கள், பொறியியல் பிரிவுப் பணியாளா்கள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி. பெரியசாமி, த. நலதேவன் முன்னிலை வகித்தனா்.

வட்டார பணி மேற்பாா்வையாளா்கள், உதவிப் பொறியாளா்கள், அமைச்சு, களப்பணியாளா்கள் தங்கள் பணிப் பொறுப்புப் பிரிவில் பராமரிக்க வேண்டிய அனைத்துப் பதிவேடுகளையும் நாளது தேதி வரை முறையே வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி அலுவலா்களிடம் ஆய்வுக் கூட்டத்திலும், ஆய்வுக்கும் சமா்ப்பிக்க வேண்டும்.

பொறியியல் பிரிவில் இருப்பு வைக்கப்பட்டுள்ள சிமென்ட், கம்பி, இரும்புக் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களின் இருப்பு நிலையைச் சரி செய்து, அறிக்கையைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உயா் அலுவலா்கள் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், அனைத்துப் பணியாளா்களும் ஆய்வுக்கு ஆவணங்களைச் சமா்ப்பிக்க தயாா் நிலையில் இருக்கவேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com