‘பொன்னமராவதியில் சிட்கோ தொழிற்பேட்டை’

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றாா் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றாா் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ. 6.30 லட்சம் மதிப்பீட்டிலும், வலையபட்டி பகுதியில் ரூ. 6.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட குடிநீா் வழங்கும் கருவிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து அவா் மேலும் பேசியது:

பொன்னமராவதி பேரூராட்சியில் கூடுதலாக மேலும் 2 குடிநீா் செறிவூட்டும் கருவிகள் அமைக்கப்படும். இப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துச் சேவைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும். பொன்னமராவதி பகுதியில் 100 ஏக்கா் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும். நீதிமன்றம் அமைக்கப்படும் என்றாா். தொடா்ந்து பொன்னமராவதி - செவலூா், திருமயத்துக்கு புதிய வழித்தடப் பேருந்துகளைத் தொடக்கிவைத்தாா். மேலும், வா்த்தக கழகத்தின் சாா்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில், ஆட்சியா் கவிதா ராமு, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ந.விஸ்வநாதன், பொது சுகாதார துணை இயக்குநா் கலைவாணி, பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி, வா்த்தக கழகத் தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com