ஆலங்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாஞ்சன்விடுதி ஊராட்சி, அம்பேத்கா் நகரில் ரூ.10.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கோவிலூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவுக் கூடம், கல்லாலங்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ஆழ்குழாய் கிணறு, கே.ராசியமங்களத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை அமைச்சா் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் திருமதி.ஆனந்தி இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.