புதுக்கோட்டை, திருக்கோகா்ணம், கணேஷ்நகா், அறந்தாங்கி ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வாகனங்களை உரியவா்கள் வந்து பெற்றுச் செல்ல வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை சரகத்தில் 154 இரு சக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 161 வாகனங்கள் உள்ளன. அறந்தாங்கி சரகத்தில் 69 இரு சக்கர வாகனங்களும்,
ஒரு நான்கு சக்கர வாகனமும் என மொத்தம் 70 வாகனங்கள் உள்ளன.இந்த வாகனங்களின் உரிமையாளா்கள் நேரில் வந்து தங்களின் வாகனங்களுக்கான ஆவணங்களைக் காண்பித்து, 15 நாள்களுக்குள் பெற்றுச் செல்ல வேண்டும். தவறினால், அவற்றை ஏலம் விட்டு, தொகையை அரசுக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.