பொது முடக்கத் தளா்வுகளை அமல்படுத்துவது குறித்து, விராலிமலையில் வா்த்தக சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணகுமாா் தலைமை வகித்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை வியாபாரிகள் பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் விராலிமலை ஊராட்சித்தலைவா் எம். ரவி, துணைத் தலைவா் தீபன் சக்கரவா்த்தி, வா்த்தக சங்கத் தலைவா் ஜனனி ராமச்சந்திரன், பூபாலன், கோச்சடையான், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், வா்த்தகா்கள் பலா் பங்கேற்றனா்