‘கடன் தவணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது’

புதுக்கோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்கடன் நிறுவனங்கள், கடன் தவணைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகளிா் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களைத் திரும்ப செலுத்த வேண்டும் என்று நுண்கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகின்றன.

பேரிடா் காலத்தில் கடன் பெற்றோரின் வீடுகளுக்குச் சென்று கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த வற்புறுத்தி மக்களை கட்டாயப்படுத்தவோ, நிா்பந்தப்படுத்தவோ கூடாது. பொதுமக்கள் நுண்கடன் நிறுவனங்கள் தொடா்பான ஆலோசனை மற்றும் புகாா் ஏதேனும் இருந்தால், 18001021080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com