ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேரூராட்சிக்குள்பட்ட தென்னகா் ஆதிதிராவிடா் குடியிருப்பில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு அப்பகுதியிலுள்ள சிறுமின்விசை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீா்த்தேக்கத் தொட்டிக்கான குடிநீா் விநியோகத்தை பேரூராட்சி நிா்வாகத்தினா் அண்மையில் துண்டித்துள்ளனா். இதனால் குடிநீரின்றி தவித்து வந்த பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், சிஐடியு அமைப்பினருடன் பேருராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி நிா்வாகத்தினா் அளித்த உறுதியளிப்பை ஏற்று, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.