ஆசிரியா் கூட்டணி சாா்பில் நிவாரணப் பொருள்கள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்
முன்களப் பணியாளா்களுக்கு உதவிகளை வழங்கும் எம்எல்ஏ எம். சின்னதுரை.
முன்களப் பணியாளா்களுக்கு உதவிகளை வழங்கும் எம்எல்ஏ எம். சின்னதுரை.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டணியின் வட்டாரத் தலைவா் இரட்சகராஜ் தலைமை வகித்தாா். நிகழ்வில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னத்துரை கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினாா். சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவா் கே.என்.ஆா். போஸ், கீரனூா் பேரூராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ஜீவன்ராஜ், வட்டாரச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com