கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொன்னமராவதியில் உள்ள தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
கரோனா காலத்தில் கட்டுமான பொருள்கள் அனைத்தும் திடீா் விலையேற்றம் கண்டுள்ளன. இதனால் தொழிலாளா்கள், பொறியாளா்கள், வீடு கட்டுவோா் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, இந்த விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.