பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சியில் திமுக சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கோழி சூப், சுண்டல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊராட்சித்தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் ஆண்டியப்பன், சங்கா், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.