புதுக்கோட்டை மாவட்ட நியாய விலைக் கடைகளில் வரும் ஜூன் 15 முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நிவாரண உதவித் தொகை 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
முதல்வரின் அறிவிப்பின்படி, 14 வகையான மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
முதற் கட்டமாக வரும் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடைகளில் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு கடையிலும் நாளொன்றுக்கு அதிகபட்ச அளவாக 100 டோக்கன்களுக்கும், அதிகபட்சமாக 200 டோக்கன்களுக்கும் பணமும் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
குடும்ப அட்டைதாரா்கள் முகக் கவசம் அணிந்தும் மற்றும் 2 மீட்டா் தனிநபா் இடைவெளியை கடைபிடித்தும், தொகுப்பும், பணமும் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடா்பான புகாா்களை பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாவட்ட குறைதீா்க்கும் அலுவலா் மற்றும் மாவட்ட வழங்கல்- நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடம் 04322-220946 என்ற எண்ணிலோ அல்லது 94450 00311 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.