விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 8 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.