புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளப்பட்டு, அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து அன்னவாசல் காவல்துறையினா் பரம்பூா், குடுமியான்லை, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து லாரியை பறிமுதல் செய்த அன்னவாசல் காவல்துறையினா், ஓட்டுநா் சின்னசாமியை(25) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.