புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இரு மோட்டாா் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒக்கநாடு கீழையூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(55). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் நண்பரோடு கறம்பக்குடி பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மது வாங்க வந்தாா்.
துவாா் பகுதியில் மது வாங்கிக்கொண்டு மீண்டும் ஊருக்கு சென்றபோது, புதுப்பட்டி அருகே சுக்கிரன்விடுதி காா்த்திக்(32), தனது நண்பரோடு ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் ராஜ்குமாரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த காா்த்திக் உள்ளிட்ட 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.