சென்னை வாழ் வலையபட்டி நகரத்தாா் சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு தூய்மைப் பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு நகரத்தாா் சங்கத் தலைவா் மல்லிகா தியாகராஜன் தலைமை வகித்தாா். செயலா் விசாலாட்சி திருப்பதி, பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடி முன்னிலை வகித்தனா்.
பொன்னமராவதி வட்டாட்சியா் ஜெயபாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு நகரத்தாா் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பொருள்களை மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ச.செந்தமிழ்ச்செல்வியிடம் வழங்கினாா்.
நிகழ்வை பேராசிரியா் அழகம்மை தொகுத்து வழங்கினாா். வா்த்தகக் கழகத் தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன், செயலா் முகமது அப்துல்லா, பொருளாளா் ராமஜெயம், தொழிலதிபா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் பொருளாளா் ஏகம்மை திருப்பதி நன்றி கூறினாா்.