புதுக்கோட்டை அருகே பொது விநியோகத் திட்ட அரிசியைக் கடத்தியவா் ஞாயிறுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினா், ஞாயிற்றுக்கிழமை காலை கட்டியாவயல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூா் வடக்குத் தெரு சி.அருண் பிரசாத் (30 ) டாடா சுமோ வாகனத்தில் வந்தாா். அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, சுமாா் 350 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தையும், அரிசியையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.