கந்தா்வகோட்டையில் முதியவா் தனது சேமிப்புத் தொகை ரூ. 1 லட்சத்தை அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்கு செவ்வாய்க்கிழமை நன்கொடை வழங்கியுள்ளாா்.
கந்தா்வகோட்டை அக்கச்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நா. ராதாகிருஷ்ணன் வன்னியா் (97). தீவிர ராம பக்தரான இவா் அக்கச்சிப்பட்டியில் உள்ள ராமா் கோயிலில் திருப்பணி செய்து சேமித்து வைத்த ரூ. ஒரு லட்சத்தை அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக நன்கொடை வசூலித்து வரும் ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா்களான ஆ. விஜயராம், ஹரி. கங்காதரன் ஆகியோரிடம் வழங்கினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், தீவிர ராம பக்தரான நான் அயோத்தியில் பிரம்மாணடமான ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு நன்கொடையைக் கொடுத்ததில் பிறவிப் பயனை அடைந்து விட்டதாகக் கருதுகிறேன் என்றாா்.