முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 01:52 AM | Last Updated : 04th March 2021 01:52 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகிலுள்ள கட்டுமாவடி சோதனைச் சாவடியில், புதன்கிழமை மாலை பறக்கும்படை அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது மீமிசலிலிருந்து திருச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த தையாராம் (26), மீட்டாராம் (40) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.22 லட்சத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து இத்தொகை அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.