கணினிப் பொறியியல் துறை மாணவா் மன்றம் தொடக்கம்
By DIN | Published On : 10th March 2021 02:54 AM | Last Updated : 10th March 2021 02:54 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை திருமயம் அருகேயுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் கணினிப் பொறியியல் துறை ச ாா்பில் மாணவா் மன்றம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு தலைமை வகித்தாா். சென்னை ஆா்எம்டி பொறியியல் கல்லூரியின் கணினி பொறியியல் துறைத் தலைவா் முனைவா் ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா் மன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முன்னதாக துறைத் தலைவா் கவிதா வரவேற்றாா். மாணவா் மன்றப் பொறுப்பாளா் ஐஸ்வா்யா அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். முடிவில் துணைத் தலைவா் நாகதேவி நன்றி கூறினாா்.