பொன்னமராவதி அருகிலுள்ள வாா்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன்கோயில் சிவராத்திரி விழாவையொட்டி, பெரியகண்மாயிலில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மஞ்சுவிரட்டில் திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பெரியகண்மாயின் சுற்றுப்
புறங்களில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் அடக்கி மகிழ்ந்தனா். மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 4 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.