ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தொடா் போராட்டம் நடத்திவரும் அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த ஞான.கலைச்செல்வன், முன்னாள் அமைச்சா் அ.வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திருமாறன் மகன் பாண்டியன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்து வாய்ப்புக்காக காத்திருந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை அதிமுகவின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த தா்ம.தங்கவேல்(43) வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதனால் அதிருப்தியடைந்த அதிமுகவினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை திரண்ட அதிமுகவினா் அக்கட்சி கொடியை ஏந்தியவாறு, வேட்பாளரை மாற்றக்கோரி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்