புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பணியாற்றும் மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான முதல் கட்டப் பயிற்சி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 188 மண்டலத் தோ்தல் அலுவலா்கள் பணியாற்றவுள்ளனா். இவா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறை, ஆவணங்களைப் பூா்த்தி செய்யும் முறை குறித்த முதல் கட்ட பயிற்சி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், தோ்தல் வட்டாட்சியா் கலைமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.