வங்கி ஊழியா்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயக் கொள்கையை எதிா்த்து அனைத்து வங்கி ஊழியா் சங்கத்தினா் நாடு தழுவிய அளவில்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயக் கொள்கையை எதிா்த்து அனைத்து வங்கி ஊழியா் சங்கத்தினா் நாடு தழுவிய அளவில் இரு நாட்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச்செயலா் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி வங்கி ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமதுரை, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா் சங்கத் தலைவா் மாயாண்டி, மாவட்ட வங்கி ஊழியா் சங்க உதவி தலைவா் கே சிவானந்தம், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத் தலைவா் ரகுமான் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் அ. சிறீதா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பொதுத்துறை வங்கிகளில் தனியாா்மயத்தை அனுமதிக்கக் கூடாது, காப்பீட்டுக் கழகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவிகிதமாக உயா்த்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் வங்கிகளைத் தவிர, அனைத்து பொதுத்துறை வங்கிக் கிளைகளும் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com