டிப்பா் லாரியில் மோதி பைக்கில் சென்றவா் பலி
By DIN | Published On : 18th March 2021 07:29 AM | Last Updated : 18th March 2021 07:29 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகே டிப்பா் லாரியின் பின்புறம் மோட்டாா் சைக்கிள் மோதியதில் புதன்கிழமை முதியவா் பலியானாா்.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள கல்லுக்காரன் பட்டி புதூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் பன்னீா்செல்வம் (49). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் புதுக்கோட்டை, தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பா் லாரி, முதுகுளம் பிரிவு சாலையில் திரும்பும்போது டிப்பா் லாரியின் பின்புறம் மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வத்தை அருகேயிருந்தவா்கள் கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விபத்துகுறித்து கந்தா்வகோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.